தவெகவின் 3ம் ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா'' இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு அது எப்படி தோணுதுனா, அய்யய்யோ.. இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்க ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரியே எனக்கு தோன்றுகிறது.