பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!

Published : Jan 21, 2026, 04:30 PM IST

NDA கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

PREV
13
பரபரக்கும் தமிழக அரசியல் களம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன், இன்று மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணியை விட்டு வெளியேறிய டிடிவி இன்று மீண்டும் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார்.

டிடிவிக்கு இபிஎஸ் வாழ்த்து

டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதை எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். டிடிவி இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், NDA மூழ்கும் கப்பல் என்றும் எத்தனை பேர் கூட்டணிக்கு வந்தாலும் வெற்றி பெற மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

23
தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

அந்த கூட்டணியில் இணைந்துள்ள அமமுக தலைவர் நேற்று வரை துரோகி என்றும் உலகத்தில் துரோகிக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டுமானால் அவருக்கு கொடுக்கலாம் என பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி 100 முறை வந்தாலும் பயன் இல்லை

இனி எப்படி அவரோடு களம் காணப்போகிறார்? அவரோடு மேடையேற போகிறார்? வாக்கு கேட்க போகிறார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தவுடன் அவருடைய பெயரை சொல்வதற்கே தவிர்க்கிறார்.

 ஆகவே இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

33
கல்வி நிதி கொடுக்க மறுக்கிறார்கள்

தேசிய கல்விக்கொள்கையின் மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான் தமிழகத்துக்கு கல்வி நிதியான 3,400 கோடி ரூபாய் கொடுப்போம் என அடம்பிடிக்கிற பாஜக, தமிழக மக்களை மண்டியிட வைப்போம் என்று சொல்லும் பாஜக, எப்படி அதிமுகவுடன் சேர்ந்து தமிழக மக்களுக்காக வாக்கு கேட்பார்கள்?

 மக்களும் எப்படி வாக்களிப்பார்கள்? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஓடிசா, பீகர் போனால் தமிழர்களை குறை சொல்லும் பிரதமர் மோடி, தன்னை எப்படி தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என நினைக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories