ரொம்ப கம்மி பட்ஜெட்டில் 8 நாள் ஏசி பஸ்ஸில் தமிழ்நாடு டூர்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட சுற்றுலா துறை

First Published Oct 24, 2024, 11:09 AM IST

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 8 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றிப்பார்க்கும் சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோயில்கள், மலைகள், அருவிகள், கடற்கரைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்தப் பயணம் சென்னையில் தொடங்கி பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மீண்டும் சென்னையில் முடிவடைகிறது.

தமிழ்நாடு டூர்

சுற்றுலா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் காடு, மலை, அருவிகளில் குளியல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் ஆர்வமாக படையெடுப்பார். தமிழத்தை பொறுத்த வரை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளுமையான பகுதிகளும், அருவிகளை கொண்ட குற்றாலம், ஒக்கேனக்கல் பகுதியும், கடல் சார்ந்த பகுதியும் உள்ளது.

அதே நேரத்தில ஆன்மிக சுற்றுலாவிற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். இந்தநிலையில் தான்  கோயில், மலைப்பகுதி, அருவி, கடல் போன்ற அனைத்து இடங்களையும் ஒரே நேரத்தில் சுற்றிப்பார்க்கும் வகையில் சூப்பர் திட்டத்தை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் தொடங்கியுள்ளது. 

சென்னை டூ புதுச்சேரி

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா திட்டத்தில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்களால் அதிகம் விரும்பப்படும் 8 நாட்கள் தமிழ்நாடு சுற்றுலா பயணத்தின் முதலாவது நாள் பயணத்தை சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாகத்தில்  காலை 7.00 மணிக்கு தொடங்கும். இந்த  சுற்றுலாவின் முத்ல நாள் பயணமாக  பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் மற்றும் கடற்கரையை பார்வையிட்ட பின்னர் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்திக் காட்டில் படகு சவாரி மேற்கொண்டு, சிதம்பரத்தில் நடராஜரை தரிசனம் செய்து முதலாவது நாள் இரவு திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் தங்குவார்கள்.

Latest Videos


புதுச்சேரி டூ ராமேஸ்வரம்

சுற்றுலாவின்   2 வது நாள் நாகூர் பள்ளிவாசல், வேளாங்கண்ணி தேவாலயம் ஆகிய இடங்களை பார்வையிட்டு மதியம்  1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சை பெரிய கோயிலை பார்வையிட்டு தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாட்டில் தங்குவார்கள்.  3 வது நாள் சுற்றுலாவில்  இராமேஸ்வரம் பகுதிக்கு  சென்று இராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு அருகில் உள்ள இடங்களை பார்வையிடுவார்கள் இதனை தொடர்ந்து  ஓட்டல் தமிழ்நாட்டில் தங்குவார்கள்.              
4 வது நாள் பாம்பன் பாலத்தை பார்வையிட்டு, திருப்புலானி அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்து திருநெல்வேலியில் மதிய உணவு முடித்து,  கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ஓட்டல் தமிழ்நாட்டில் தங்குவார்கள்.        

ராமேஸ்வரம் டூ கொடைக்கானல்

5 வது நாள் சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயன் கோவிலை பார்வையிட்டு, மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் திருக்கோவிலை பார்வையிட்டு இரவில் ஓட்டல் தமிழ்நாட்டில் தங்குவார்கள். 6 வது நாளில் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறைகள் ஆகிய சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதுடன், நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டு இரவு ஓட்டல் தமிழ்நாட்டில் தங்குவார்கள்.         

கொடைக்கானல் டூ திருச்சி

7 வது நாள் சில்வர் அருவியை பார்வையிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயில், மலைக்கோட்டை கோயில்களில் தரிசனம் செய்து திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் இரவு தங்குவார்கள்.              
8 வது நாள் காலை கிளம்பி மாலை சென்னை வந்தடைவார்கள்.   

சுற்றுலா கட்டணம் எவ்வளவு.?

சுற்றுலா பயணத்தின் போது சுற்றுலா வழிகாட்டி அனைத்து சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள்  குறித்து எளிய முறையில்  எடுத்துரைப்பதுடன், அவர்கள் அனைத்து சுற்றுலாத்தலங்களையும் குறித்த நேரத்தில் பார்வையிடச் செய்ய ஏற்பாடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பயணக்கட்டணமாக ஒருவருக்கு 18ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை இந்த சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டால் குறைந்த அளவில் கட்டண்ம வசூலிக்கப்படுகிறது. 

click me!