School Holiday: மார்ச் 14ம் தேதி சனிக்கிழமையான நாளை தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் மாசி மக திருவிழா மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
25
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும் என அறிவிக்கப்பட்டது.
35
முத்துமாரியம்மன் தேர் திருவிழா
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்று திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா மார்ச் 9ம் தேதி திங்கள் கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மார்ச் 9ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை பணி நாள் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்தார்.
55
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்
இந்நிலையில் மார்ச் 14ம் தேதி சனிக்கிழமையான நாளை தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.