இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி, வெங்காயம் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தக்காளி, வெங்காயம் ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.