சென்னை கோயம்பேட்டில், ஜூலை 1ம் தேதி ஒரு கிலோ தக்காளி விலை 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மறுநாளே ஒரு கிலோ 50 ரூபாய் என்ற நிலையை தொட்ட தக்காளி நாளுக்கு நாள் விலை அதிகரித்து சதம் அடிக்க தொடங்கியது. அடுத்த சில நாட்களில் சதம் அடித்த தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இரட்டை சதம் அடித்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.