கடந்த 2025ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. முதலில் 3,935 காலி பணியிடங்கள் நிரப்படும் என கூறிய நிலையில் 727 கூடுதலாக சேர்த்து 4,662ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளியானது. இந்நிலையில் குரூப்-4 பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.