முன்னதாக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய விஜய், தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருப்பதால், மக்களுக்கு 'பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவேன்' என்று உறுதியளித்தார். மேலும், 'நான் ஒன்றும் அரச பரம்பரையில் இருந்து வரவில்லை, தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைப் பார்க்கிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவை விமர்சித்த விஜய்
தொடர்ந்து பேசிய அவர், முந்தைய திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 'கடந்த அரசு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது; அவர்கள் பதவியை விட்டுப் போகும்போது, கருவூலத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம். நான் இதை சும்மா சொல்லவில்லை; உள்ளே சென்று பார்த்தால்தான், என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரியும்' என்றார் விஜய்.
'வெளிப்படையான அரசை' நடத்துவோம் என்று உறுதியளித்த முதல்வர், 'நான் எதையும் மறைத்துச் செய்ய மாட்டேன், வெளிப்படையாகவே செய்வேன்' என்றார். மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், மாநிலத்தின் இளைஞர்களைக் காப்பாற்ற போதைப்பொருட்களை ஒழிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.