Free Electricity : 200 யூனிட் இலவச மின்சாரம்.. கண்டிஷன் போட்ட முதல்வர் விஜய்.. யாருக்கெல்லாம் இலவசம் தெரியுமா?

Published : May 10, 2026, 03:38 PM IST

“200 யூனிட் இலவச மின்சாரம்” - இந்த ஒரு வாக்குறுதி பல குடும்பங்களுக்கு நிம்மதி தரும்னு நினைச்சாங்க. ஆனால், புதிய அறிவிப்பில் வந்த ஒரு நிபந்தனை, அந்த எதிர்பார்ப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

PREV
15
200 யூனிட் இலவச மின்சாரம்

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கிய நிலையில், ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் கவனம் செலுத்தப்பட்ட யூ. 200 இலவச மின்சாரம்” வாக்குறுதி தொடர்பாக முதல் கோப்பிலேயே அவர் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும் உள்ளது. ஆனால், அறிவிப்பில் உள்ள நிபந்தனைகள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

25
முதல்வர் விஜய் முதல் கையெழுத்து

புதிய அரசாணையின்படி, இரண்டு மாதங்களில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று அரசு வாதிடுகிறது. அதே நேரத்தில், 500 யூனிட்டைத் தாண்டும் பயன்பாடு உள்ள வீடுகளுக்கு முழு சலுகையும் கிடைக்காது என்பது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

35
100 யூனிட் இலவச மின்சாரம்

முன்பு நடைமுறையில் இருந்த 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து ஏற்பட்ட குழப்பத்துக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய முறையில், 500 யூனிட்டிற்குள் உள்ளவர்கள் 200 யூனிட்களை இலவசமாகப் பெறுவார்கள்; 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பழைய 100 யூனிட் சலுகை தொடரும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தாலும், “அனைவருக்கும் இலவசம்” என்ற தேர்தல் முழக்கத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த வரம்பு சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

45
அரசின் நிபந்தனை

இந்த நிபந்தனைக்கு பின்னால் “மின்சார சேமிப்பு” மற்றும் “நிதி கட்டுப்பாடு” என்ற காரணங்களை அரசு முன்வைக்கிறது. அதிக பயன்பாடு உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவதை கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினங்களை சமன்படுத்தும் முயற்சி இதுவாக பார்க்கப்படுகிறது. ஆனால், கோடைகாலங்களில் ஏசி போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் குடும்பங்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறுமா என்ற கேள்வி எழுகிறது.

55
புதிய மின்சார சலுகை

மின்சார அறிவிப்பைத் தவிர, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக முதலமைச்சர் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைப்பு, மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சமூக பாதுகாப்பு நோக்கில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகின்றன. இருப்பினும், சில நாட்களில் மின்சார சலுகை தொடர்பான விவாதங்கள் சில அரசியல் சூடுபிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories