கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 41 பேரி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.