TN Govt: இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு.. டோட்டலாக மாறும் சிஸ்டம்.. தமிழக அரசு அதிரடி!

Published : Jun 11, 2026, 03:47 PM IST

TN Govt: தமிழகத்தில் இனி சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு விண்ணப்பித்த ஐந்தே நாட்களில் கிடைக்கும். பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

PREV
14
இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு

தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான சேவைகளான சாதி சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவற்றை விண்ணப்பித்த ஐந்தே நாட்களில் நேரடியாக வழங்குவதற்கான அதிரடி நிர்வாகச் சீர்திருத்தங்களை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

24
ஒரு மாதம் வரை ஆனது

தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் சிஸ்டம் மூலம் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் போது, பொதுமக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. அதாவது சாதி மற்றும் இதர சான்றிதழ்கள்: வழக்கமாக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என பல்வேறு கட்டப் பரிசீலனைகளைக் கடந்து தாசில்தார் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு பொதுவாக 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஆகிறது. சில நேரங்களில் மலைவாழ் மக்கள் அல்லது சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ்கள் பெற மாதக்கணக்கில் கூட தாமதமாகிறது.

இதேபோல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள், தாலுகா அலுவலகங்களின் பணிச்சுமை மற்றும் கள ஆய்வுகளில் ஏற்படும் தாமதம் காரணமாக, பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால தாமதத்தைக் குறைத்து, மக்களின் அலைச்சலைத் தவிர்க்கவே அரசு தற்போது இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளது.

34
புதிய சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?

பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கவும், சேவைகளை மிக விரைவாக வழங்கவும் சாதி, வருமானம் உள்ளிட்ட 34 வகையான அத்தியாவசியச் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை முற்றிலும் சீரமைக்கப்பட உள்ளது.

துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம்: இனி பெரும்பாலான சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான முழு அதிகாரம், தாலுகா அலுவலகங்களில் உள்ள துணை வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

5 நாள் கெடு; ஆட்டோமேட்டிக் அப்ரூவல்: பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அந்தந்த பகுதி அதிகாரிகள் 5 நாட்களுக்குள் கள ஆய்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யத் தவறினால், ஆன்லைன் மென்பொருள் மூலம் அந்த விண்ணப்பங்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் உருவாக்கப்படும் வகையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது.

வட்டாட்சியர்களின் பணி மாற்றம்: இந்த அதிரடி மாற்றத்தால், வழக்கமான வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் நில நிர்வாகம் போன்ற முக்கியப் பணிகளில் மட்டுமே இனி தனிக் கவனம் செலுத்துவர்.

44
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி

சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்கல்வி மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் கல்லூரிகளில் சேருவதற்கு சாதி சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாகும்.

தற்போது மாணவர்கள் பலரும் இச்சான்றிதழுக்காக விண்ணப்பித்து வரும் நிலையில், 5 நாட்களில் சான்றிதழ் என்ற அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மாணவச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories