பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கவும், சேவைகளை மிக விரைவாக வழங்கவும் சாதி, வருமானம் உள்ளிட்ட 34 வகையான அத்தியாவசியச் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை முற்றிலும் சீரமைக்கப்பட உள்ளது.
துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம்: இனி பெரும்பாலான சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான முழு அதிகாரம், தாலுகா அலுவலகங்களில் உள்ள துணை வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
5 நாள் கெடு; ஆட்டோமேட்டிக் அப்ரூவல்: பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அந்தந்த பகுதி அதிகாரிகள் 5 நாட்களுக்குள் கள ஆய்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யத் தவறினால், ஆன்லைன் மென்பொருள் மூலம் அந்த விண்ணப்பங்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் உருவாக்கப்படும் வகையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது.
வட்டாட்சியர்களின் பணி மாற்றம்: இந்த அதிரடி மாற்றத்தால், வழக்கமான வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் நில நிர்வாகம் போன்ற முக்கியப் பணிகளில் மட்டுமே இனி தனிக் கவனம் செலுத்துவர்.