12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23ம் தேதி வெளியாகும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் பட்டியல் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியானது. இத்தேர்வை எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% எனவும், வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
24
மறுகூட்டல் நடைமுறை
இந்நிலையில் வரும் கல்வியாண்டிலிருந்து 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாது; முதலில் விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோர முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கானகட்டணம் ரூ 275/- தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
34
அரசு தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நடைபெற்று முடிந்த மார்ச் 2025 , மேல்நிலை இரண்டாம் பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் ( Re - total ) மற்றும் மறுமதிப்பீடு ( Revaluation கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) ஜூன் 23ம் தேதி ( திங்கட் கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் , மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.