திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட அடுப்புகளை பாரம்பரிய முறைப்படி தயார் செய்து. அதில் முறுக்கு, லட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட விற்பனை பிரசாரங்களை ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக டன் கணக்கில் விறகுகளை கொள்முதல் செய்து, இரவு பகலாக பிரசாதங்களை தயார் செய்து வருவதாக ஊழியர்கள் தெரிவித்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் வரை விறகு அடுப்பு பயன்படுத்தி மட்டுமே பிரசாதங்கள் தயார் செய்ய முடியும்.