Tirppur Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 6 பேர் சம்பவ இடத்திலேயே.. நடந்தது என்ன?

Published : May 13, 2026, 08:34 AM IST

Tirppur Accident: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

PREV
14
திருப்பூர் விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடி அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ரவிசந்திரன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவ தொடர்பாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

24
பாதுகாப்பு பணியில் காவலர் ரவிசந்திரன்

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். உயிரிழந்தவர்களின் 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிசந்திரன் ஈடுபட்டிருந்தார்.

34
லாரி மீது கார் மோதல்

அப்போது அதே சாலையில் அதிவேகத்தில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காவலர் ரவிச்சந்திரன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காவலர் ரவிசந்திரன், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. விபத்துக்குள்ளான கார் லாரிக்கு அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டுநர் தூக்கலக்கத்தில் இருந்ததே விபத்து காரணம் என தெரியவந்துள்ளது.

44
6 பேர் உயிரிழந்த சோகம்

இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நடத்துள்ளது. உயிரிழந்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதிகாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories