ஜூலை 7ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

Published : Jul 04, 2025, 03:19 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை என்றாலே குஷிதான். இந்நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகின்றன.

24
திருச்செந்தூர் முருகன் கோவில்

இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

34
சிறப்பு பேருந்துகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

44
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories