திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு! நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்!

Published : Dec 10, 2025, 09:45 AM IST

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

PREV
15

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையோரம் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

25

இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 4 முதல் 5 மணிநேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட மாத காலங்களில் மட்டும் அதிகாலையில் கோவில் நடைதிறப்பு மற்றும் பூஜை கால நேரங்கள் வேறுபடும்.

35

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாதத்தை ஒட்டி நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் அதிரடி மாற்றம் செய்யப்படுவதாக கோயிர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மார்கழி 1ம் தேதியான டிசம்பர் 16-ம் தேதி முதல் மார்கழி 30-ம் தேதியான ஜனவரி 14-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

45

பின்னர் 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு மேல் 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனையும், காலை 6 மணிக்கு மேல் கால சந்தி தீபாராதனையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற உள்ளது. மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சையும், 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 7 மணிக்கு ராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை திருக்காப்பிடுதல் பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது. 

55

மார்கழி மாதம் 17-ம் தேதி 2026ம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. ஜனவரி 3-ம் தேதி மார்கழி மாதம் 19-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories