ஆரம்பமே இப்படியா.? தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தப்போகுது.! வானிலை மையம் அலர்ட்

Published : Mar 03, 2025, 02:51 PM IST

தமிழகத்தில் இன்று தென்தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களில் வெப்பநிலை 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது.

PREV
15
ஆரம்பமே இப்படியா.? தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தப்போகுது.! வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்து வெயிலின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. ஆரம்பமே மக்களை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. ஜனவரி மாதம் வரை மின் விசிறி மட்டும் பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது ஏசியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் மழை மற்றும் வெயில் தாக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25
தமிழகத்தில் வறண்ட வானிலை

இதன் காரணமாக இன்று (03-03-2025) தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை 04-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 05-03-2025 முதல் 09-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

35
உயரப்போகுது வெப்பநிலை

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

03-03-2025 முதல் 07-03-2025 வரை: அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2" செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

03-03-2025 முதல் 07-03-2025 வரை; தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
 

45
சென்னையில் வெப்பநிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (03-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

55
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல் பகுதிகள்:

03-03-2025: மாலத்தீவு - லட்சதீவு பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று
அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories