சனிக்கிழமை ரெடியா இருங்க மக்களே! ரேஷன் கார்டு பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு!

Published : Jan 23, 2026, 02:37 PM IST

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை எளிதாக மேற்கொள்ள ஒவ்வொரு மாதமும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

PREV
15
ரேஷன் கார்டு

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 2.23 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை போன்ற பல சலுகைகள் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

25
ரேஷன் கார்டு பெயர் சேர்க்க திருத்தம் செய்ய முகாம்

இந்நிலையில் ரேஷன் கார்டுக்கு தினமும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டுகளில் பெயர்களை மாற்றம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பெயர்களை சேர்க்க திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை (டிசம்பர் 24) அதாவது நாளை நடைபெறவுள்ளது.

35
உணவு பொருள் வழங்கல் துறை

இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 24.01.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

45
கைபேசி எண் பதிவு மாற்றம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

55
சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள்

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories