ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. இதனால், கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில், தேர்வு தேதியில் மாற்றம் செய்து முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது.