தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? மாணவர்களுக்கு 44 நாட்கள் கோடை விடுமுறை!

Published : Mar 20, 2026, 07:37 AM IST

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

PREV
15

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியதை அடுத்து மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பின்னர் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணி ஏப்ரல் 9 முதல் தொடங்கி ஏப்ரல் 20 வரை நடத்தப்படவுள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம் தேர்வு முடிவடைந்துள்ளன.

25

இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது.

35

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. இதனால், கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில், தேர்வு தேதியில் மாற்றம் செய்து முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது.

45

அதன்படி முழு ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, துறை செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

55

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை கோடை விடுமுறை 44 கிடைக்க உள்ளதால் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories