தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மாநில முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது, இம்முறை எத்தனை கட்டங்களாக நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி திங்கள் கிழமை எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
25
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அந்நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் தேர்தல் நடைபெறும் நாளில் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
35
ஏப்ரல் 23 சம்பளத்துடன் விடுமுறை
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மாநில முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
55
மற்ற மாநிலங்களில் விடுமுறை விவரம்
கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதால் ஏப்ரல் 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.