ஆனால் கையெழுத்து இயக்கத்திற்கு காவல் துறை அனுமதி பெற வில்லையெனவு்ம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திடும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கூறி காவல்துறையினர் தமிழிசை தடுத்தனர். ஆனால் தீவிரவாதி மாதிரி என்னை ஏன் காவல் துறை சுற்றி உள்ளனர், எனக்கு புரியவில்லையென தமிழிசை வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து தமிழிசையை போலீசார் கைது செய்த நிலையில் வாகனத்தில் ஏற மறுத்து காவல்துறையினரோடு வாக்குவாதம் மேற்கொண்டார். தொடர்ந்து அரை மணி நேரமாக வாகனத்தில் ஏற தமிழிசை மறுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.