தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள் கொண்டாட்டம்!

Published : Dec 03, 2025, 08:22 PM IST

Tamil Nadu School Holiday: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
12
தொடர் கனமழை

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

இதேபோல் சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சீரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பரவாலாக மழை பெய்தது. இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (டிசம்பர் 4) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

22
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

அந்த வகையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மித் சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories