தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், பயனாளிகளுக்கு மாதந்திர ரூ.1,000 திட்டமிட்டபடி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்காக சில கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்ததால், திட்டம் தாமதமாகுமா என்ற அச்சம் மக்களிடையே உருவானது. ஆனால், அரசு வழக்கம்போல் மாதத்தின் 15-ஆம் தேதி நிதியை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை, ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக தேர்தல் வாக்குறுதிகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம், தற்போது கிடைக்கும் ரூ.1,000 உதவித்தொகை, ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் முதியோர்க்கு ரூ.3,000 வழங்கும் நோக்கத்துடன் திட்ட மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.