சிவகாசி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால், உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.
தொடர் வெடி விபத்து, தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அதிகாரிகள் ஆய்வு, சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்தது.