தீபாவளி கோலாகலம்..! ரூ.6000 ஆயிரம் கோடிக்கு விற்றுத் தீர்ந்த சிவகாசி பட்டாசு..!

Published : Oct 22, 2025, 01:13 PM IST

வட மாநிலங்களில் தேவையை பூர்த்தி செய்ய மழை நின்றவுடன் உற்பத்தி மீண்டும் தொடங்கும். இந்த ஆண்டு மாநிலத்தில் சுமார் 15,000 சில்லறை விற்பனை நிலையங்கள் பட்டாசுகளை விற்க உரிமம் பெற்றிருந்தன.

PREV
14

சிவகாசியின் புகழ்பெற்ற பட்டாசுத் தொழில் இந்த தீபாவளியில் சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது . ஆனால் டெல்லி- என்.சி.ஆர் பகுதியில் பட்டாசுகள் மீதான முழுமையான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன் கூறுகையில், தடை வாபஸ் பெறப்பட்டதன் பலன்கள் தெரியத் தொடங்கியுள்ளன. எங்கள் பட்டாசுகளில் குறைந்தது 14%-15% ஐ டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். இது தீபாவளியின் போது குஜராத் போன்ற மாநிலங்களிலும், திருமணங்கள் போன்ற பிற பண்டிகை நிகழ்வுகளிலும் விற்பனை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.

24

சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.

தொடர் வெடி விபத்​து, தற்​காலிக​மாக தடை செய்​யப்​பட்ட பட்​டாசு ஆலைகளில் உற்​பத்​திக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் ஏற்​பட்ட தாமதம், அதி​காரி​கள் ஆய்​வு, சிறு பட்​டாசு ஆலைகள் வேலைநிறுத்​தம் உள்​ளிட்ட காரணங்​களால் பட்​டாசு உற்​பத்தி 30 சதவீதம் வரை குறைந்​தது.

34

ஆடிப்​பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, தீபாவளி பண்​டிகைக்கு மொத்த விற்​பனை தொடங்​கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகைக்கு 20 வகை​யான புதிய ரக பட்​டாசுகள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டு, 300 வகை​யான பட்​டாசுகள் விற்​பனைக்கு வந்​தன. உற்​பத்தி குறை​வால் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு பேன்ஸி ரக பட்​டாசுகளுக்கு 20 சதவீதத்​துக்​கும் மேல் விலை உயர்ந்​தது. உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த விற்​பனை​யாளர்​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​பனை​யாகின.

கடந்த ஒரு வார​மாக தமிழகத்​தில் பெய்து வரும் தொடர்​மழை காரண​மாக சில்​லறை விற்​பனை பாதிக்​கப்​பட்​டது. உற்​பத்தி குறைந்​தா​லும், விலை உயர்வு மற்​றும் டெல்​லி​யில் பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கியதன் காரண​மாக கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

44

வட மாநிலங்களில் தேவையை பூர்த்தி செய்ய மழை நின்றவுடன் உற்பத்தி மீண்டும் தொடங்கும். இந்த ஆண்டு மாநிலத்தில் சுமார் 15,000 சில்லறை விற்பனை நிலையங்கள் பட்டாசுகளை விற்க உரிமம் பெற்றிருந்தன. சென்னை, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் மழை காரணமாக விற்பனை சற்று குறைந்திருந்தாலும், கிட்டத்தட்ட 90% சரக்குகள் விற்றுத் தீர்ந்துவிட்டன" என தமிழ்நாடு பட்டாசு வர்த்தகர்கள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories