போராட்டத்தின் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போக்குவரத்துக் கழகங்களில் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணி காலத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதி உதவி கோரி போக்குவரத்துத் துறை தலைவர் கடிதம் அனுப்பி இருந்தார்.