ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தமிழக அரசு! ரூ.1137 கோடி ஒதுக்கி அசத்தல்

Published : Aug 20, 2025, 07:05 AM IST

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுகாக வழங்கப்பட வேண்டிய ரூ.1137 கோடியை ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

PREV
13
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணப்பலன்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போன்று ஓய்வு பெறக்கூடிய நாளில் பணப்பலன் வழங்கப்படுவது கிடையாது. அந்த வகையில், போக்குவரத்துக் கழகங்களில் பணி செய்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை முதல் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து சிஐடியு சார்பாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

23
அரசாணை வெளியீடு

போராட்டத்தின் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போக்குவரத்துக் கழகங்களில் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணி காலத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதி உதவி கோரி போக்குவரத்துத் துறை தலைவர் கடிதம் அனுப்பி இருந்தார்.

33
ரூ.1137 கோடி ஒதுக்கீடு

இதனைப் பரிசீலித்த அரசு, ரூ.1137.97 கோடியை தற்காலிக முன்பணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி ஆணையிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories