தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ்மொழி திறனாய்வுத்தேர்வு (Tamil Talent Exam), தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (Chief minister talent exam) என்ற 2 சிறப்பு தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்நிலையில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
24
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது.
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
34
தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்; இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்; மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக்/CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.h என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரைடபதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 04.09.2025 என்று கூறப்பட்டுள்ளது.