கர்ப்பிணி பெண்களுக்கு 18ஆயிரம் உதவி தொகை
கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பம் தரித்த பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்து பிக்மி எண் பெற வேண்டும் இதனையடுத்து 2000 ரூபாய், 4ஆயிரம் ரூபாய் என தவனை முறையில் 18ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், புரத சத்து பிஸ்கட், ஆவின் நெய், பூச்சி மாத்திரை, துண்டு ஆகியவைகளை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.