குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு தண்டனைவிவரம்
உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு இரத்து செய்யப்படும்.
இப்புகார் குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000/-வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைwww.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவுசெய்யலாம்,
எனவே. சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் (https://www.tnswd.poshicc.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் அனைத்து நிறுவனங்களின் உள்ளக புகார் குழு வின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.