அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! இனி இப்படி தான் செயல்படனும்- வெளியான அரசானை

Published : Apr 16, 2025, 09:45 AM ISTUpdated : Apr 16, 2025, 03:01 PM IST

தமிழக அரசு, தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாணைகள், சுற்றறிக்கைகள், கையொப்பங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளும் தமிழில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PREV
14
அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! இனி இப்படி தான் செயல்படனும்- வெளியான அரசானை

Tamil is mandatory - order to government employees : தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் எனவும் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுனவங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழியில் தான் அரசாணை, சுற்றறிக்கை, அதிகாரிகள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

24
Tamil language

தமிழ் மொழி - வெளியான சுற்றறிக்கை

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் ராஜாராமன் அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளார்.  தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் வெளியிடப்பட்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

அதில்,  தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறு தங்களை கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன் படி 

1. அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும்.

2. சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்.

34
Government order

தமிழில் கட்டாய கையெழுத்து

3. துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள். அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல் அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.

5. அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

44
government employee

தமிழில் மொழி பெயர்த்து வெளியிடனும்

மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories