2023-24ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி மைல்கல்லைத் தாண்டி ரூ.15,543 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் 18,20,340 விவசாயிகளுக்கு ரூ.16,410 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நடப்பு நிதி ஆண்டிலும் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைக்காக வரும் 2025-26-ம் நிதி ஆண்டில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். வட்டி மானியத்துக்கு ரூ.853 கோடி, பயிர் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,477 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.