இருந்த போதும் 5 பேர் உயிரிழந்தனர். விமான சாகச நிகழ்வை பார்க்க 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்த நிலையில் ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்தனர். மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெயிலில் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. பேருந்துகளிலும் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது. அதிகமான கூட்டத்தில் சுமார் 4 மணி நேரம் வாகனங்கள் மெரினா சாலையை சுற்றியுள்ள பகுதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு மு்ன கூட்டியே திட்டமிடாதது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ஈடுபடவில்லையெனவும்,