மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது. தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்! பெண்களின் உரிமையும் உயரும்'' என்று கூறியுள்ளார்.
உரிமைத்தொகை திமுகவின் தேர்தல் ஆயுதம்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்க திமுக உறுதியாக உள்ளது. இதற்காக திமுக கையில் வைத்துள்ள மிகப்பெரும் ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த வாக்குறுதியும் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.