மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (வண்டி எண்: 06116) நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்,
இதேபோல் விழுப்புரத்தில் இருந்து 13ம் தேதி, 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் மாலை 4.40 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சிறப்பு மெமு ரயில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும், இரவு 6.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மெமு சிறப்பு ரயில்களில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!