முன்பதிவு இல்லாத ரயில் சேவை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தென்னக ரயில்வே, ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலை அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய தேதிகளில் இயக்குகிறது. பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறப்பு ரயிலானது ஈரோடுலிருந்து புறப்படுகிறது. சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரலை வந்து அடைகிறது. இந்த ரயிலில் 12 முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியானது இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது