இன்னும் வீட்டிற்கு பட்டா வாங்கவில்லையா? உடனே பெற சூப்பர் வாய்ப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

Published : Mar 19, 2025, 09:02 AM ISTUpdated : Mar 19, 2025, 10:10 AM IST

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னையில் பட்டா பெற சிறப்பு முகாம் நடத்துகிறது. மணலி புதுநகர் திட்டப்பகுதி ஒதுக்கீடுதாரர்கள் மார்ச் 19-21 வரை விண்ணப்பிக்கலாம்.

PREV
15
இன்னும் வீட்டிற்கு பட்டா வாங்கவில்லையா? உடனே பெற சூப்பர் வாய்ப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!
tamil nadu housing board

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961-ம் ஆண்டிலிருந்து பொது மக்களின் நலன் கருதி மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

25
CMDA

இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இன்னும் வீட்டிற்கு பட்டா வாங்கவில்லையா? உடனே பெற சூப்பர் வாய்ப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!
 

35
Special Camp

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை 

45
Revenue Department

ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று முதல் 7 நாட்களுக்கு! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! குஷியில் பொதுமக்கள்!

55
tamilnadu government

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கெனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories