இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 01/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 02/08/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் குறிப்பிட்ட இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் அதிகமாக கூடும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற 01/08/2025 (வெள்ளிக்கிழமை) அன்றைந தினம் 340 பேருந்துகளும், 02/08/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.