ஆடிபெருக்கு, 2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

Published : Jul 30, 2025, 07:55 AM IST

ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

PREV
14
வார விடுமுறை கொண்டாட்டம்

இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு வார விடுமுறை ஓய்வு அளிக்க கூடிய நாளாக உள்ளது. அந்த வகையில் வார இறுதி நாள் விடுமுறையையொட்டி வெளியூர்களுக்கு பயணம்செய்ய பொதுமக்கள் திட்டமிடுவார்கள். அந்த வகையில் ஆடிபெருக்கு (ஆடி-18) மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01/08/2025 (வெள்ளிக்கிழமை) 02/08/2025 (சனிக்கிழமை) மற்றும் 03/08/2025 (ஞாயிறுக் கிழமை) ஆடிபெருக்கு(ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ஆடிபெருக்கு சிறப்பு பேருந்து

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 01/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 02/08/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் குறிப்பிட்ட இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் பயணிகள் அதிகமாக கூடும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற 01/08/2025 (வெள்ளிக்கிழமை) அன்றைந தினம் 340 பேருந்துகளும், 02/08/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

34
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

அடுத்ததாக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 01/08/2025 அன்று 20 பேருந்துகளும் 02/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

44
முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2892 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories