இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 26-ம் தேதி தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கும். இது தமிழகத்திற்கு மழையை பெற்று தரும் எனவும்.
தென்மேற்குப் பருவமழை தேனி பக்கம் வீசும் மழை சாரல்.! சாரல்.!
வெயிலில் வாடும் மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளது. மே 26-ம் தேதி தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நுழையும் என அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், பருவமழை தெற்கு வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளை நோக்கி முன்னேற சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளது.
26
வறட்சி மற்றும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு
இந்த முறை பருவமழையில் சில சிக்கல்கள் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, எல் நினோ பாதிப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதனால், பருவமழை தொடங்கிய பிறகு நல்ல மழை பெய்தாலும், எல் நினோ காரணமாக வறட்சி மற்றும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற சூழல்கள் உருவாகும் என எச்சரித்துள்ளது.
36
மழையே மழையே வா வா
பருவமழை வருகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், வடமேற்கு மற்றும் மத்திய இந்திய மக்களுக்கு இப்போதைக்கு வெயிலில் இருந்து தப்ப வழியில்லை. இந்த வாரம் முழுவதும் அங்கு தீவிர முதல் மிகத் தீவிர அனல் காற்று வீசும். இதனால், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மழைக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பில் தென்மேற்குப் பருவமழை நுழைவதையே கேரளாவில் பருவமழை தொடங்குவதாகக் கூறுகிறோம். இது கோடையின் கடும் வெயிலில் இருந்து மழைக்காலத்திற்கு மாறும் முக்கிய அறிகுறியாகும். பருவமழை வடக்கு நோக்கி நகர நகர, நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். IMD-யின்படி, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி வாக்கில் கேரளாவில் பருவமழை தொடங்கும். இதில் சுமார் ஏழு நாட்கள் வரை வித்தியாசம் ஏற்படுவது இயல்பானது.
56
நல்லா தெரிஞ்சுகிட்டு சொல்லுங்க
கேரளாவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதை IMD 2005-ம் ஆண்டு முதல் கணித்து வருகிறது. இதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ஸ்டாட்டிஸ்டிகல் மாடலை பயன்படுத்துகிறது. இதில் நான்கு நாட்கள் வரை வித்தியாசம் இருக்கலாம். இந்த மாடல், வடமேற்கு இந்தியாவின் குறைந்தபட்ச வெப்பநிலை, தென்னிந்தியாவின் பருவமழைக்கு முந்தைய மழை, தென் சீனக் கடல் மீதான கதிர்வீச்சு உட்பட மொத்தம் ஆறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கிறது.
66
அடடா அடடா அடை மழைடா
கேரளாவில் மழை தொடங்கிய பிறகு தமிழகத்திலும் எல் - லினோ காரணமாக தமிழகத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2005 முதல் 2025 வரையிலான 21 ஆண்டுகளில், 2015-ம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் IMD-யின் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாகவே இருந்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் (2020-2025) கூட, வானிலை ஆய்வு மையம் கூறிய தேதிக்கு அருகிலேயே பருவமழை வந்துள்ளது.