சென்னை எக்மோர் முதல் ஜோத்பூர் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் தற்காலிகமாக சென்னை எக்மோரில் இருந்து புறப்படாமல் தாம்பரத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வண்டி எண் 22663 தாம்பரம் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், வருகின்ற 23 நவம்பர் 2024 முதல் தாம்பரத்தில் மதியம் 2 மணி 50 நிமிடங்களுக்கு புறப்பட்டு, தன்னுடைய வழக்கமான பாதையில் ஜோத்பூர் சென்றடையும். அதேபோல ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வரக்கூடிய எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22664) 26 அக்டோபர் 2024 அன்று மாலை 5.10 மணியளவில் எழும்பூர் செல்லாமல் தாம்பரத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.