School Student: தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
25
9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
35
மதிப்பெண் விவரங்கள் வெளியானது
அதன்படி 2025-2026-ம் அதாவது நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு அரசு தேர்வு இயக்கத்தால் ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப்ரவரி 18 -ம் தேதி வெளியிடப்பட்டது.
இருப்பினும், மாணவர்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப்ரவரி 18 முதல் 24-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொண்டு தற்போது தேர்வானவர்கள் இறுதிப் பெயர் பட்டியல் நேற்று பள்ளிகளின் பெயர்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
55
தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தகுதி
அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தகுதி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (other Examinations) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம். மேலும், இந்த பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சார்ந்த பரிசீலனைக்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 5,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 285 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.