ஃபெஞ்சல் புயல் அலற விடப்போகும் மாவட்டங்கள்; வானிலை மையம் எச்சரிக்கை!!

Published : Nov 30, 2024, 03:05 PM ISTUpdated : Nov 30, 2024, 04:32 PM IST

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே புதுவைக்கு அருகே கடக்க உள்ளது. 

PREV
14
ஃபெஞ்சல்  புயல் அலற விடப்போகும் மாவட்டங்கள்; வானிலை மையம் எச்சரிக்கை!!
Cyclone Fengal

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

24
Red Alert

இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை திருவள்ளூர், செங்கல்பட் காஞ்சிபுரம், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர், மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை! பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

34
Orange Alert

அதேபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான  ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ. மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புயல் இன்று கரையை கடக்காதாம்! சென்னையில் மழையும் விடாதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

44
Tamilnadu Heavy Rain

நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட்டும்,  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories