எனவே, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பட்டா, சிட்டா, உதவித்தொகை கேட்டல், தொழில் கடன் கேட்டு மனு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை இதை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பிறகு எந்தெந்த தேதிகளில் குறைத்தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகும்.