மிஸ் பண்ணிடாதீங்க! ரேஷன் கார்டில் மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்! நாள் குறித்த தமிழக அரசு!

Published : Jun 12, 2025, 05:49 AM IST

தமிழகத்தில் 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில், பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஜூன் 14ம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடைபெறும்.

PREV
15
ரேஷன் கடைகள்

ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

25
மகளிர் உரிமை தொகை திட்டம்

இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றனர். ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை பெற முடியும். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டமாக இருந்தாலும், பொங்கல் பரிசு தொகுப்பாக இருந்தாலும் ரேஷன் அட்டை ரொம்ப முக்கியம். அந்த வகையில் தற்போது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

35
பெயர் திருத்தம்

இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர். ஆனால் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

45
குறைதீர் முகாம்

அதாவது பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜீன் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் ஜூன் 14ம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

55
ரேஷன் கார்டு திருத்தம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லதுசேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories