இந்நிலையில் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துள்ள அன்புமணி தான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போது வரை பாமகவில் தலைவராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும் கூறியிருந்தார்.