மிஸ்டர் மோடி.. ஜனநாயகன் படத்திற்காக வெளிப்படையாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி

Published : Jan 13, 2026, 01:45 PM IST

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை முடக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
12
விஜய்க்கு தண்ணி காட்டும் தணிக்கை வாரியம்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாத காரணத்தால் கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய அப்படம் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை தணிக்கை வாரியமானது அரசியல் நோக்கத்தோடு நிறுத்தி வைத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

22
வரிந்துகட்டி விஜய்க்காக குரல் கொடுக்கும் காங். தலைவர்கள்

குறிப்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உட்பட பல தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “‘ஜன நாயகன்’திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும்.

திரு. மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories