இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காதலி சுசித்ரா ஆதியை மருத்துவமனைக்கு அழைத்தது போல சூர்யா(20), அலிபாய்(20), கார்த்திக்(21) ஆகியோருக்கு போன் செய்து ஆதி மருத்துவமனைக்கு வந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி 3 பேரும் தனது நண்பர்களுடன் வந்து ரவுடி ஆதியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் காதலியுடன் இருந்த ரவுடி ஆதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் 2 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.