இந்தநிலையில் ஆந்திரா அருகே பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் பாம் சரவணன் கைது செய்துள்ளனர். பாம் சரவணன் மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. வெடி குண்டை சரியாக திட்டமிட்டு எரிவதால் பாம் சரவணன் என பட்டப் பெயர் சூட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதப்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்தனர்.