ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்
வட சென்னை பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டருக்கே நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை சுத்துப்போட்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்தனர்.