இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை என்றார். முதல்வரின் இந்த பேச்சால் பாமகவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ராமதாஸ் குறித்து மரியாதை குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.