இன்றும் மழை எச்சரிக்கை
இதனால் வாகன போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேலும் இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.