இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் உங்களது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கப்போகிறது என்பது மக்கள் கையில் உள்ளது என தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நலன் கருதி எடுக்க உள்ளோம். அதன் உங்களிடம் முதலில் தெரிவித்துவிட்டு தான் மற்றவரிடம் சொல்லுவேன் என கூறினார்.
கரூரில் துயர சம்பவம் நடைபெற்று விட்டது அங்கு சென்று ஆறு கூறினாலும் அவர்களை சென்னைக்கு அழைத்து ஆடி கூறினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்குள் உள்ளே நுழைந்து காரணங்களை சொல்லிக் கொண்டு இருப்பது சரியாக இருக்காது.